மணப்பாறையில் ஜல்லிக்கட்டு போட்டி

ஞாயிறு, 22 ஜனவரி 2017 (11:35 IST)
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றது.


 

 
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இன்று மணப்பாறையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நிரந்தர தீர்வு வேண்டும் என்று கோரி போராட்டக்காரர்கள் ஜல்லிக்கட்டு இன்று நடத்தக்கூடாது என்று போராடி வருகின்றனர். இருந்தும் ஒரு சில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்துள்ளது. பெரும்பாலான முக்கிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவில்லை.
 
இதையடுத்து தற்போது அமைச்சர் வேலுமணி தலைமையில் கோவையில் ரேக்ளா பந்தயம் தொடங்கியுள்ளது. அங்கு இளைஞர்கள் கூட்டம் இல்லை. முழுவதுமாக கட்சி சார்ந்த நபர்கள் மட்டுமே கூட்டமாக உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்