அவற்றிற்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக அரசும் உத்தரவாதம் கொடுத்துள்ளது. அதோடு இந்த வீர விளையாட்டுகளில் பங்குபெறும் காளைகளின் உரிமையாளர்கள் அதிக அளவு பணம் செலவு செய்து அதை பராமரிப்பதோடு, முறையான பயிற்சியும் கொடுத்து வருகிறார்கள்.
நீண்ட நெடுங்காலமாக வரலாற்று பின்னணியோடு, தமிழரின் கலாசாரம் பண்பாட்டோடு கலந்த இந்த வீர விளையாட்டை நடத்துவதற்கு ஏதுவாக சட்டத்திருத்தம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் விஜயகாந்த் கூறியுள்ளார்.