அடுத்த அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனத்தை மழை பெய்து வருகிறது.
இறுதியாக 4 மணி முதல் 7 மணி வரை புயலின் மூன்றாவது, அதாவது மையப்பகுதி கரையக் கடக்கும் எனவும், அப்போது 90 லிருந்து 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும், 7 மணி வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், புயல் கரையை கடந்த பின்னரும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.