ஃபேஸ்புக்கில் தொடர்ந்து சுவாதி கொலை வழக்கு குறித்து பதிவிட்டு வரும் தமிழச்சி என்பவர் தற்போது பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். இவர் ஏற்கனவே சுவாதியின், தந்தை மற்றும் தாய் பற்றி கூறியது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அவர், சுவாதியை கொலை செய்தவர் பெயர் முத்துக்குமார். தற்போது தஞ்சாவூரில் சுவாதியின் சித்தப்பா பாதுகாப்பில் இருக்கிறார். சுவாதி கொலையில் தொடர்புடையவர்கள் 4 பேர்கள்.
தொடர்ந்து கூறிய அவர் இது தவறான பதிவு என்றால், சுவாதியின், தந்தை மற்றும் அவரது சித்தப்பா ஆகியோர் தன்மீது வழக்கு தொடரலாம். இது குறித்தான ஆதாரம் என்னிடம் உள்ளது, அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நிரூபிக்க தயார் என கூறியுள்ளார்.