சூதுகவ்வும்' பாணியில் கடத்தப்பட்ட சென்னை தொழிலதிபர்

வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (08:10 IST)
விஜய்சேதுபதி நடித்த 'சூதுகவ்வும்' படத்தின் பாணியில் சென்னை தொழிலதிபர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
 
சென்னை ஆர்.கே நகர் நேதாஜி நகரை சேர்ந்தவர் பேப்பர் தொழிற்சாலை அதிபர் 61 வௌஅட்ஜி பக்கீர் முகமது என்பவர் நேற்று தொழுகைக்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். அபோது காரில் வந்த கும்பல் ஒன்று மயக்க ஸ்பிரே அடித்து கடத்தி சென்று, அவரது குடும்பத்தினர்களிடம் 80 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளது.
 
பேரம் நீண்ட நேரம் ஆனதாலும் பக்கீர் முகமது குடும்பத்தினர் அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என்று கூறியதை அடுத்து கடத்தப்பட்டவர்கள்' உள்ளத்தை அள்ளித்தா' பாணியில் தொகையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கடைசியில் 3 லட்ச ரூபாய்க்கு பேரம் பேசினர்.
 
இதன் பின்னர் ரூ.3 லட்சத்தை பெற்று கொண்டு பக்கீர் முகமதுவை கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளனர். இதுகுறித்து தான் புகார் கொடுக்க சென்றபோது காவல்துறையில் அந்த புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்