இந்நிலையில், கடந்த 6 வருட காலமாக முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்று கூறி, கடந்த ஜூன் 10 ஆம் தேதி முதல், 35 இடங்களிலும், ஆந்திரா மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலும் காலை 8 மணி முதல் ஒரே நேரத்தில் தீவிர சோதனை நடத்தினர். இன்றும் 4 வது நாளாக சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சோதனையில், முறையான ஆவணங்கள் இல்லாத கட்டுக்கட்டாக பணம் மற்றும் தங்கம் போன்றவைகளை பறிமுதல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாளையும் இந்த சோதனை தொடரும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.