சென்னை மக்கள் மழையால் பாதிக்கப்பட்ட போது இசையமைப்பாளர் இளையராஜா, அவரே களத்தில் இறங்கி ஏராளமான உதவிகள் செய்தார். மழை வெள்ளத்தால் சூழ்ந்த ஒரு காது கேளாதவர் பள்ளிக்கு சென்று, அங்கு தவித்த குழந்தைகளை மீட்டார். மேலும் அவர்களுக்கு உணவு பொருட்களும் வழங்கினார்.
இந்நிலையில், மழையால் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டதை பற்றி பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு செய்தியாளர், சமீபத்தில் வெளியாகி சர்சைக்குள்ளான பீப் பாடல் பற்றி அவரிடம் கருத்து கேட்டார்.