பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்தி தொல்லை செய்த ஐஐடி மாணவர் கைது

செவ்வாய், 5 ஜூலை 2016 (20:04 IST)
பள்ளி மாணவியை தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை செய்த ஐடிஐ மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

 
இராஜபாளையம் அருகே வாழவந்தாள்புரத்தைச் சேர்ந்தவர் மாணவி [ஐஸ்வர்யா - பெயர் மாற்றப்பட்டுள்ளது]. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர் ரமேஷ்.
 
இந்நிலையில், மாணவி ஐஸ்வர்யா பள்ளிக்கு சென்று வரும் போது, ரமேஷ் தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
 
இது குறித்து மாணவி பலமுறை எச்சரித்தும் ரமேஷ் தொடர்ந்து அதே செயலை செய்து வந்தாராம். இந்நிலையில் ரமேஷ், மாணவியின் தந்தை ராமரிடம் பிரச்சனை செய்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராமர் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஐடிஐ மாணவர் ரமேஷை கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்