தேமுதிக சார்பில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தேர்தல் பணிக்குழு அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் அனகாபுத்தூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனகை முருகேசன் தலைமை தாங்கினார்.
காஞ்சிபுரம் மாநாட்டில் விஜயகாந்த் பேசும்போது, என் தொண்டர்களை நான் கிணற்றில் விழச் சொன்னால் கூட கண்ணை மூடிக்கொண்டு விழுவார்கள் என்றார். அவரின் நம்பிக்கைக்கு ஏற்ப, அவர் எங்களை கிணற்றில் விழச் சொன்னாலும், விழும் முதல் மாவட்டமாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தேமுதிக இருக்கும்.