சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவேன்: விஜயதாரணி எச்சரிக்கை!

புதன், 3 ஆகஸ்ட் 2016 (12:24 IST)
சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து அமைச்சர் சன்முகம் பேசிக்கொண்டிருக்கும் போது காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி தனக்கு பேச வாய்ப்பு கேட்டபடி இருந்தார்.


 
 
பலமுறை அமர சொல்லியும் அமராமல் தொடர்ந்து பேசிய விஜயதாரணியை சபாநாயகர் தனபால் பெண் என்றும் பார்காமல் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்தார். இதனையடுத்து தான் விஜயதாரணி அமைதியானார்.
 
இந்நிலையில் தமிழக சட்டசபையில் தொடர்ந்து தனக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக விஜயதாரணி புகார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தலைவர் தனபால் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக குற்றம் சாட்டிய அவர், சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளிக்காவிட்டால் பேரவையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவேன் என கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்