இந்த சூழலில் தமிழகம் முழுவதும் சசிகலாவுக்கு எதிரான மனநிலையிலேயே பொதுமக்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் சசிகலாவுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் சசிகலா மீதான் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்தில் வரும் என உச்ச நீதிமன்றம் கூற அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அந்த மனுவில், சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்றால் தமிழகம் முழுவதும் கலவரம் வெடிப்பதற்கான சூழல் நிலவுகிறது. ஏற்கனவே பண மதிப்பிழப்பு, வர்தா புயல், ஜெயலலிதா மரணம் போன்றவற்றால் தமிழகத்தில் குழப்பமான சூழல் உள்ளது.
இந்நிலையில் புதிதாக பிரச்சனை ஏற்படக்கூடாது, மேலும் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது அதில் தீர்ப்பு அவருக்கு எதிராக வந்தால், வரக்கூடிய சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.