மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் சின்னம் பொறித்த கைக்கடிகாரத்தை வழங்கியதாக குற்றம்சாற்றிய நரேந்திர மோடி, அதை நிரூபிக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மோடி நாலாந்திர பேச்சாளர் போல் பேசியுள்ளார். மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது பொய்யான குற்றச்சாற்றுகளை கூறியுள்ளார்.
ப.சிதம்பரம் கைகடிகாரங்கள் கொடுத்ததாக பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதனை மோடி நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம். சிறுபான்மையின மக்களுக்கு காங்கிரஸ் பாதுகாப்பாக இருந்து வருகிறது. இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்று ஞானதேசிகன் கூறினார்.