காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

திங்கள், 23 பிப்ரவரி 2015 (13:18 IST)
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு கட்டாயம் மந்திரி பதவி வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
 
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அரும்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், “ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் எங்களிடம் இல்லை. சாப்பாட்டுக்கு கூட பணம் இல்லாமல் திண்டாடும் நாங்கள் ஓட்டுக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்? அதனால் தான் ஸ்ரீரங்கம் தேர்தலில் நிற்கவில்லை.
 
வருகிற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு கட்டாயம் மந்திரி பதவி வழங்கப்படும். பட்ட மேற்படிப்புவரை அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்குவோம். மீண்டும் காமராஜரின் பொற்கால ஆட்சியை காண மக்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும்” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்