இனி நான் செல்போன் பயன்படுத்தமாட்டேன்: சு.ப.உதயகுமார்

திங்கள், 8 பிப்ரவரி 2016 (01:30 IST)
இனி நான் செல்போன் பயன்படுத்தமாட்டேன் என அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சு.ப.உதயகுமார் சபதம் செய்துள்ளார்.
 

 
இது குறித்து, அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சு.ப.உதயகுமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவில், எனது கைப்பேசி உடைந்துவிட்டது. கொஞ்ச நாட்களுக்கு இன்னொன்றை பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். எனவே முகநூல் அல்லது மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி இப்படிக்கு,சு ப. உதயகுமாரன் என தெரிவித்துள்ளார்.
 
கடந்த சில தினங்களாக சு.ப. உதயகுமாருக்கும், அவருடன் உள்ள நெருங்கிய நண்பர்கள் சிலருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால், இந்த கருத்து வேறுபாட்டை தீர்க்க சிலர் முயன்று வருவதாகவும், இதற்காகவே, உதயகுமார் தனது செல் போன் பயன்பாட்டை தவிர்த்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும், வரும் சட்ட மன்றத் தேர்தலில் சு.ப.உதயகுமார் நிற்க முயன்றுவருவதாகவும், அதனால், அவரது செல் போன் உரையால்களை காவல்துறை ரகசிய பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதால் செல் போன் உபயோகத்தை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தான் ஏன் செல்போன் பயன்படுத்தவில்லை என் உதயகுமார் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்