கன்னியாகுமரியில், சம்ஸ்கார்பாரதி என்ற அமைப்பு சார்பில் கன்னியாகுமரியில் இருந்து கர்நாடக மாநிலம் கோக்கர்ணம் வரை பாரத பண்பாட்டு கலாசார ஒருமைப்பாட்டு யாத்திரை தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது தான் ஜல்லிக்கட்டு விளையாட்டு நிறுத்தப்பட்டது. தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிறுத்தப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி தான் முழுக்க, முழுக்க காரணம்.