இதனையடுத்து போலீசார் ஏதும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரை நடத்தியே கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். சென்ற முறை ஜெயலலிதா இருந்ததால் அவருக்கு ஜெயிலில் முதல் வகுப்பு அறை மற்றும் வசதிகள் கிடைத்தது. ஆனால் இந்த முறை சசிகலாவின் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அவர் மிகவும் கோபமாக கணப்பட்டதாக சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.