தீக்குளிப்பேன் என்ற மனைவியை கணவர் எரித்துக்கொல்ல முயற்சி

வெள்ளி, 3 ஜூன் 2016 (17:31 IST)
சென்னையில் குடும்ப தகராறு ஒன்றில் தீக்குளிப்பேன் என்ற மனைவியை கணவர் எரித்துக்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.


 

 
சென்னையில் உள்ள மடிப்பாக்கத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் குடும்ப பிரச்சனையில் தனது மனைவியை எரித்துக் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
 
கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் சக்திவேலின் மனைவி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி உடம்பில் மண் எண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைக்க முயற்வித்துள்ளார். அப்போது சக்திவேல், நீ என்ன பத்தவைப்பது, நானே உன்ன எரிக்கிறேன் என்று தீப்பெட்டியை எடுத்து தீப்பற்ற வைத்து உள்ளார்.
 
தீப்பற்றியதுடன் உடனே சக்திவேலின் மனைவி சத்தம் போட்டுள்ளார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தபோது, சக்திவேல் வீட்டை விட்டு ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய சக்திவேலின் மனைவி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதையடுத்து மடிப்பாக்க காவல்துறையினர் சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய அவரை தேடி வருகின்றனர்.
 
   
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்