அவரோடு இது நிற்காது எனவும், விரைவில் சசிகலாவின் உறவினரும், அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தினகரனை முதல்வராக முன்னிறுத்தும் வேலை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இது பற்றி தமிழகத்தின் ஏதே ஒரு இடத்தில் ஒரு பலகை வைக்கப்பட்டுள்ளது அதில் “ டெட் பாடியை வைத்து 3 மாதம், எடப்பாடியை வைத்து எத்தனை மாதம்?” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதாவது, ஜெ.இறந்த நிலையில்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும், 3 மாதம் மக்களை ஏமாற்றினார்கள் என்ற செய்தி இன்னும் பரவிக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில்தான், இப்படி ஒரு போர்டை அந்த ஊர் மக்கள் வைத்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.