ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதிலும் கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக வனப் பகுதியில் இருந்து வரும் குட்டைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி, பல்வேறு சாலைகளில் தரைப் பாலங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகிறது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.