ஹிப் ஹாப் ஆதி குழப்புகிறார்: சமுத்திரக்கனி, இயக்குனர் கரு.பழனியப்பன்

திங்கள், 23 ஜனவரி 2017 (11:51 IST)
நடிகர் சமுத்திரக்கனி அலங்காநல்லூரில் அமர்ந்து போராடும் என் சகோதரர்கள் சார்பாக பேசுகிறேன். என் சகோதரர் ஹிப்ஹாப்  தமிழா ஆதியின், ஜல்லிக்கட்டுப் போராட்டக்களத்தில் இருந்து பின்வாங்கும் பேச்சு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. அது தன்னெழுச்சியாக போராடும் இளைஞர்களுக்கு பயத்தைத் தருகிறது.

 
இங்கு குழுமியிருக்கும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவேண்டும் என்று சில புள்ளிகள் செய்யும் வேலை தான்  இது.  லட்சம் பேர் கூடும் இடங்களில், 4 பேர் குழப்பத்தை ஏற்படுத்தத்தான் செய்வார்கள். இதனால் கோபம் இருந்தால்  ஹிப்ஹாப்தமிழா ஆதி அமைதியாக இருந்து இருக்கலாம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளித்த நாமே, போராட்டம் திசைதிரும்புகிறது  என நினைத்து பின்வாங்குவது ஏற்புடையது அல்ல. என் சகோதரிகள், தாய்மார்கள் பலர் கலந்துகொண்டு நடக்கும் மிக  கண்ணியமான போராட்டம் இது. இதனை உணர்ந்து செயல்படவேண்டும்' என நடிகர் சமுத்திரக்கனி ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு அறிவுரை கூறியிருந்தார்.
 
இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கும் ஹிப் ஹாப்  ஆதிக்கு இயக்குநர் கரு.பழனியப்பன் டிவிட்டர் வாயிலாக வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
 
அவை உங்கள் பார்வைக்கு...
 

Part 1 pic.twitter.com/WfWJtPF95z

— Karu palaniappan (@karupalaniappan) January 22, 2017

Part 2 pic.twitter.com/dSg63uxZO8

— Karu palaniappan (@karupalaniappan) January 22, 2017

வெப்துனியாவைப் படிக்கவும்