இதனையடுத்து சென்னை அம்பத்தூர், ஆவடி, கோயம்பேடு, வளசரவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, குரோம்பேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியது.
இதனால் இரு சக்கர வாகனங்களும், கார்களும் தண்ணீரில் தத்தளித்தன. அண்ணா சாலை, காந்தி மண்டபம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிண்டி, ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளுமே வெள்ளத்தில் மிதந்தன.