சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர் "சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் 25 இடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளே என்றும் மாநகராட்சி மன்றத்தில் பேசிய அவர் சென்னையில் 859 இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதில் 772 இடங்களில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது" என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னதாக, வடகிழக்கு பருவமழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி மேயர் பதவி விலக வலியுறுத்தி திமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டனர். இதனால் அவர்களை அனைவரையும் வெளியேற்ற மேயர் உத்தரவிட்டதை தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.