இதில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 55 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 18 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 பேரும் இறந்துள்ளனர்.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
ஏற்கனவே, பழத்த மழை காரணமாக செம்பரப்பாக்கம், புழல், வீராணம் ஏரிகள் நிறைந்து வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று இதே போன்று தொடர்ந்து மழை பெய்தால் என்னாகுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர்.