இன்னும் சிலமணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

செவ்வாய், 20 ஜூன் 2023 (15:26 IST)
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக வட தமிழகத்தில் இன்னும் சில மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
குறிப்பாக நீலகிரி, கோயம்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்