இன்னும் சில மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

வியாழன், 12 அக்டோபர் 2023 (17:15 IST)
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதும் காற்று திசை வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் உயர்ந்துள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்