சமீபமாக பெய்த கனமழையால் கடலூர் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் மழையால் பலியானதாக தெரிகிறது. நிறைய பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை படகுகள் மூலம் தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல் படையினர், போலிசார் மீட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.