நாகர்கோவில் பஸ் நிலையம் அருகே, பலத்த காயங்களுடன் ஒருவருடைய உடல் சாக்கடையில் இருப்பதாக பொதுமக்ள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர், இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வாலிபரை சாக்கடையில் இருந்து வெளியே எடுத்தனர்.
அப்போது, அவருக்கு உயிர் இருப்பதை அறிந்த போலீஸார், நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீஸார், திருடிய பணத்தை பங்கு போடும் ஏற்பட்ட தகராறில், 4 பேர் கொண்ட கும்பல் தன்னுடைய கூட்டாளியை கடுமையாக தாக்கி சாக்கடையில் திணித்து வைத்து விட்டு தப்பியோடி விட்டதாக தெரிவித்தனர். மேலும், அந்த கும்பல் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் குறிப்பிட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கும்பலை சேர்ந்த நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.