இன்னும் இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: வானிலை எச்சரிக்கை..!

Mahendran

புதன், 18 செப்டம்பர் 2024 (14:43 IST)
கடந்த சில நாட்களாகவே இயல்பை விட அதிக வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. 
 
மேற்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக, தமிழகத்திலும் புதுவையிலும் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். இருப்பினும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு, அதாவது இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்றும் சில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
 
இருப்பினும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி வரை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மே மாதம் போல் வெப்பம் அடித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்