சட்டப்பேரவையில் திமுக, அதிமுக மற்றும் பன்னீர்செல்வம் அணியின் ஆதரவு எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த அமளிக்கிடையே முதல்வர் பழனிசாமி, நம்பிக்கை வாக்கு கோரினார். மேலும் திமுக எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே உண்மையான ஜனநாயகத்திற்கு வழிவகுக்கும் என கூறியுள்ளார். மேலும் வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் எனவும் கூறினார், இதனிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தி.மு.க, காங்கிரஸ் மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.