அப்போது அவர் கூறுகையில், ”தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் அடங்கிய தஞ்சை தரணியில் 18 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட அதிமுக, திமுக வெற்றிபெறவில்லை என்ற நிலையை நீங்கள் ஏற்படுத்தி இருந்தால் ஆட்சியாளர்கள் திருந்தி இருப்பார்கள்.
பாமகவை சிலர் ஜாதிக்கட்சி என்று கூறுகிறார்கள். ஜாதியை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. நான் தமிழக மக்களுக்காக, தமிழ் மொழிக்காக, மண்ணுக்காக, தமிழர்களின் உரிமைக்காக களத்தில் நின்று போராடி உள்ளேன்” என்றார்.