அப்பாவிகளான அவர்களை மீட்டு நாடு திரும்ப வேண்டிய உதவிகளையும், நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறேன். அந்த நடவடிக்கையையொட்டி சவுதி அரேபியாவில் கை வெட்டப்பட்ட கஸ்தூரி பற்றிய செய்தியை அறிந்ததும் தாய்நாடு திரும்ப உரிய அத்தனை செயல்பாடுகளையும் விரைவுபடுத்தியிருக்கிறேன்.
மேலும் தனது பணியாளரை பட்டினிப்போட்டு துன்புறுத்தியது மட்டுமின்றி அதுபற்றி புகார் தெரிவித்ததால் கையை வெட்டிய குற்றத்திற்காக, மேற்படியார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென கேட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.