அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு..

Arun Prasath

வெள்ளி, 3 ஜனவரி 2020 (18:17 IST)
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்படவிருந்த நிலையில் ஜனவரி 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு

தமிழக பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை உள்ளடக்கி இந்த விடுமுறைகள் இருக்கும்.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறைகள் முடிந்து ஜனவரி 3 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன் பிறகு மேலும் ஒரு நாள் நீட்டிட்டு ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் விடுமுறை நீட்டித்து ஜனவரி 6 ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித் துறை அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்