ஆனால், இந்த கொலையில் ராம்குமாருக்கு மட்டும் தொடர்பு இருப்பதாய் நான் நம்பவில்லை. அவர் கைது செய்யப்பட்ட விதம், இடம் ஆகியவை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவருக்கு பின்னால் வேறு யாரவது இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
சுவாதி வழக்கில் இன்னும் பல மர்மங்கள் அடங்கியுள்ளது. ராம்குமாரை கருவியாக யாரேனும் பயன்படுத்தி உள்ளனரா?, உண்மையிலேயே சுவாதி தன்னுடைய காதலை ஏற்கததால்தான் ராம்குமார் கொலை செய்தாரா? அல்லது வேறு யாருக்கா செய்தாரா? என்பது பற்றி போலீசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும்.