விற்று தீர்த்த சகிலாவின் சுயசரிதை

வெள்ளி, 10 ஜூன் 2016 (19:27 IST)
சென்னையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் சுயசரிதை புத்தகங்கள் விற்பனையில் சகிலாவின் சுயசரிதை புத்தகம் அதிக அளவில் விற்பனையாகி உள்ளது.


 

 
சென்னை தீவுத்திடலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தக கண்காட்சி இந்த ஆண்டு சற்று கால தாமதமாக தொடங்கினாலும்   வழக்கம் போலவே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
 
சுமார் 700 அரங்குகளி்ல் 10 லட்சம் தலைப்புகளில் லட்சக்கணகான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சியில் சுமார் 6 ஆயிரம் புதிய புத்தகங்களும், ஒரு லட்சம் நூல்களும் இடம் பெற்றுள்ளன. பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களுக்கான பிரெய்லி நூல்கள் அடங்கிய சிறப்பு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
 
அமோகமாக நடைபெறும் புத்தக விற்பனையில் சுயசரிதை புத்தகங்களே அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளது. அதிலும் சகிலாவின் சுயசரிதை அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளது.
 
இது மறுக்க முடியாத, அனைவரிடமும் சகிலாவின் மீதுள்ள ஆர்வத்தை சுட்டிக்காட்டியுள்ளது. 
 
  
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்