கிரானைட் குவாரிகள் மற்றும் முறைகேடாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட பகுதிகள் போன்றவற்றை ஆய்வு செய்த சகாயத்திடம் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் புகார் மனுக்களை அளித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய அவர், தற்போது 10 ஆவது கட்ட விசாரணை நடத்தி வருகிறார்.
இதைத் தொடர்ந்து, தற்போது கொலை மிரட்டல் புகார் எதிரொலியாக நவீன துப்பாக்கியுடன், தற்போது மொத்தமாக, 2 துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மற்றும் 4 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.