பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு குறித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

புதன், 26 அக்டோபர் 2022 (18:40 IST)
பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு குறித்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 
 
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில் பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
இந்த உத்தரவு காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியாது என்ற நிலை ஏற்படலாம்.
 
மேலும் சிறப்பான கல்வியை மாணவர்களுக்கு வழங்க ஆசிரியர்களின் தகுதி முக்கியம் என்றும் சிறந்த கல்வி தகுதி பெறாத ஆசிரியர்கள் தரமான கல்வியை வழங்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்