தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் சிவராஜ், தன்னிடம் வட்டிக்கு பணம் வாங்க பெண்களை தனது பண்ணைக்கு அழைத்துச் சென்று அவர்களுடன் செக்ஸ் உறவு மேற்கொண்டுவந்தார். மேலும், அவர்களுக்கு தெரியாமல் அதை வீடியோ பதிவு செய்து ரசித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் தன்னிடம் வர மறுத்த பெண்களிடம் அந்த வீடியோ விபரத்தைக் கூறி மிரட்டி வரவழைத்து செக்ஸில் ஈடுபட்டிருக்கிறார். இந்த சம்பவம் வெளியே தெரியவந்ததும் பாலக்கோடு காவல்துறையினர் சிவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது சில பெண்கள் புகார் செய்தனர். விசாரணையில் அவர் 27 பெண்களை பலாத்காரம் தெரியவந்தது.
இந்த நிலையில் சிவராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய தர்மபுரி போலீஸ் எஸ்.பி. லோகநாதன், மாவட்ட ஆட்சியர் விவேகானந்தனுக்கு பரிந்துரை செய்தார்.