ரூ.32 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கத்தின் விலை!!

வியாழன், 20 பிப்ரவரி 2020 (11:06 IST)
சென்னையில் தங்கத்தின் விலை இது வரை கண்டிராத விலை உயர்வை கண்டுள்ளது. 
 
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.31,720க்கு விற்பனை ஆனாது. அதேபோல 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.39 உயர்ந்து ரூ.3,965க்கு விற்பனையானது. 
 
ஆனால், இன்று தங்கத்தின் விலை குறையாமல் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.31,840க்கு விற்பனை ஆகிறது. 
 
அதாவது, கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.336 வரை உயர்ந்து புதிய உச்சத்தில் தொடர்ந்து விற்பனையாகிறது. விரைவில் ரூ.32 ஆயிரத்தை தங்கத்தின் விலை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்