இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் முன்பு இன்று நடைபெற்றது. அப்போது தீர்ப்பை வாசித்த நீதிபதி, " புதிய இரு சக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு, மோட்டார் சைக்கிளை தயாரித்த நிறுவனமே 2 புதிய தலைக்கவசங்களை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.