உடுக்கை, மேளதாளத்துடன் பக்தர்கள் பால்குடத்துடன் அரசு பள்ளி அருகே வந்த போது, அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் திடீரென எழுந்து நின்று சாமியாட ஆரம்பித்தனர். இதனை பார்த்த ஆசிரியர்களும், மாணவிகளும் ஆச்சரியமடைந்தனர்.
மாணவிகள் சாமியாடிய விஷயம் கோயில் பூசாரிக்கு தெரியப்படுத்தி உடனடியாக அவர் வரவழைக்கப்பட்டார். பள்ளிக்கு வந்த பூசாரி, மாணவிகளுக்கு திருநீர், குங்குமம் நெற்றியில் இட்டார். இந்த சம்பவத்தால் பள்ளியிலும், அப்பகுதியிலும் பரபரப்பு ஏற்பட்டது.