இந்நிலையில், மதியழகன் அந்த சிறுமியை பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது அறைக்கு அழைத்து சென்று ஆபாச படங்களை காண்பித்து, அந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். மேலும் நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார்.
இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த சிறுமியின் பள்ளியில், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. இதை கவனித்த அந்த சிறுமி நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளான தகவலை குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து புதுச்சேரி குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர், இது குறித்து போலீஸ் ஐ.ஜி. பிரவீர் ரஞ்சனிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் லாஸ்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி மதியழகனை கைது செய்தனர்.