ஊழல் புகாரில் சிக்கிய ராம் மோகன் ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதரணி மற்றும் பல அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இவர் 1981ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வானவர். அதன்பின் தமிழகத்தில் மேலும், சுகாதாரம், ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பதவி வகித்தவர். மேலும் இவர் நிதித்துறையில் அதிக அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.