பராமரிப்பு பணிகள் முடிவு: மீண்டும் நாளை முதல் இயங்குகிறது பாம்பன் பாலம்

செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (07:10 IST)
இந்தியாவின் அடையாளர்களில் ஒன்றும், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடங்களில் ஒன்றுமாகிய ராமேஸ்வரம் பாம்பன் பாலம் கடந்த 3 மாதங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மூடப்பட்டது.
 
கடடந்த அண்டு டிசம்பர் 4ம் தே திபாம்பன் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாம்பன் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கோளாறு சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. 
 
இதனையடுத்து பணிகள் முடிவடைந்து தற்போது மூன்று மாதத்திற்க்கு பின் பிப்ரவரி 27ம் தேதி முதல் அதாவது நாளை முதல் பாம்பன் தூக்குப் பாலம் வழியாக  ராமேஸ்வரத்திற்கு பயணிகளுடன் ரயில் பத்து கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே  அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்