கிருஷ்ண மூர்த்தி பிணமாக கண்டெடுக்கப்பட்டதும், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கிருஷ்ண மூர்த்தியின் நட்பு வட்டாரத்தில் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவரது நண்பர் ராபர்ட்டிடம் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் தான் கிருஷ்ண மூர்த்தியை கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கொலை செய்த ராபர்ட் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நானும் கிருஷ்ண மூர்த்தியும் நண்பர்கள். இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவோம். எப்பொழுதும் கிருஷ்ண மூர்த்தி எனக்கு குறைவான அளவு மதுவே குடிக்க கொடுப்பார். இதனால் எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும்.