காட்டு யானை தாக்கி 4 பேர் பலி; நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிக்கிய யானை!

வெள்ளி, 2 ஜூன் 2017 (15:30 IST)
கோவை மதுக்கரை வனகோட்டத்துக்குட்பட்ட பகுதிக்கு வந்த காட்டு யானை போத்தனூரில் வீட்டுக்கு வெளியே தூங்கி கொண்டிருந்த காயத்ரி என்ற 12 வயது சிறுமியை காலால் மிதித்து கொன்றது.

 
அதே போன்று போத்தனூர் அடுத்த வெள்ளலூருக்கு நடந்து சென்றுகொண்டிருந்த ஜோதி, நாகரத்தினம் ஆகியோரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றும் பழனிச்சாமி படுகாயத்துடன் மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனால் வனத்துறை ஊழியர்கள் யானையை பிடிக்கும் வரைக்கும் யாரும் வீட்டை விட்டு வெளியே எச்சரிக்கை விடுத்ததோடு,  கும்கி யானை உதவியுடன் காட்டு யானையை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தனியாக சுற்றித்திரிந்த ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறை ஊழியர்கள் பிடித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்