அதன் பேரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் டாக்டர் பொன்.கவுதம சிகாமணி உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விழுப்புரத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு இன்று நீதிபதி சுந்தரமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் பொன்முடி, கோதகுமார், கோபிநாத், லோகநாதன், ஜெயச்சந்திரன், சதானந்தம், ராஜ மகேந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள்.