மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் ராமமூர்த்தி என்பவரின் குடும்பத்திற்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி முறைகேடாக வாங்கியதாகக் கூறி, ராமமூர்த்தியின் மனைவி ராஜேஸ்வரி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
இந்த மனு, நீதிபதி சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலம் தொடர்பான வழக்கில் காந்தி அழகிரி மீது புகார் அளித்த ராஜேஸ்வரி சமாதானமாகச் செல்வதாகக் கூறியதை அடுத்து, காந்தி அழகிரி மீதான வழக்கை நீதிபதி ரத்துச் செய்து உத்தரவிட்டார்.