அந்த கடிதத்தில் "தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வது தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 6 கைது சம்பவங்கள் நடந்துள்ளன. சமீபத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து 12-10-2015 அன்று 4 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 24 மீனவர்களை கைது செய்து தலைமன்னார் கொண்டு சென்றுள்ளனர்.
இவ்வாறு தொடர்ந்து கைது செய்து துன்புறுத்தும் நடவடிக்கையானது, தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பறிக்கும் செயல். இந்த செயலை இந்தியா அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.
எனவே, சமீபத்தில் கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள் உள்பட, இலங்கை சிறைகளில் உள்ள 78 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 38 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்