நமது தமிழ்நாட்டு மீனவ சகோதரர்களின் வாழ்வாதாரத்தை அன்றாடம் பறித்து, ஏதோ ஒரு சாக்குக்கூறி, அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்வதும், அவர்களை சிறையில் அடைப்பதும், பிறகு கொஞ்ச காலம் கழித்து, இந்திய அரசினரின் கோரிக்கையை ஏற்று அவர்களை மட்டும் (படகுகளை திருப்பித் தராமல்) விடுதலை செய்வதுமான வாடிக்கையான வேடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது இலங்கை அரசு.
இது தவிர, கடலில் மீன்பிடிக்கும்போது, அவர்களது எல்லைக்கு சென்றால் 15 கோடி ரூபாய் வரை அபராதம் விதிப்பதாகவும் கூறுகிறார்கள்.