அவரின் நிறுவனம் செயல்பட்ட இரண்டாவது மாடியிலிருந்து, இன்று அதிகாலை 3 மணியளவில் கரும்புகை வெளிப்பட்டது. இதை பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ஐந்து வண்டிகளில் அங்கு விரைந்து வந்து, நீண்ட நேரம் போராடி அங்கு எரிந்த தீயை அணைத்தனர்.